Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விழுப்புரம் அமிர்த கணபதி கோவிலில் ... வேளாங்கண்ணியில் புனித வெள்ளி வழிபாடு: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு! வேளாங்கண்ணியில் புனித வெள்ளி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செல்லாண்டியம்மன் கோவிலில் பல ஏக்கர் நிலமிருக்குங்க... பராமரிப்புக்கு வழியிருக்கா?
எழுத்தின் அளவு:
செல்லாண்டியம்மன் கோவிலில் பல ஏக்கர் நிலமிருக்குங்க... பராமரிப்புக்கு வழியிருக்கா?

பதிவு செய்த நாள்

26 மார்
2016
12:03

மடத்துக்குளம்: மடத்துக்குளம் அருகேயுள்ள பழமையான செல்லாண்டியம்மன் கோவிலில் தினசரி பூஜை நடத்த  பொதுமக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர். மன்னர்கள், பாளையக்காரர்கள் மற்றும் ஜமீன்கள் ஆட்சியில் அம்மன் (பெண் தெய்வங்கள்) வழிபாடு சிறப்புடன் இருந்துள்ளது.  கிராமங்கள் தோறும் பெண் தெய்வங்களுக்கு கோவில்கள் கட்டப்பட்டு அம்மன்கோவில்கள் என்று அழைக்கப்பட்டன. மடத்துக்குளம் பகுதியிலு ள்ள அனைத்து தாய்கிராமங்களிலும் அம்மன்கோவில்கள் உள்ளன. இந்தக்கோவில்களில் ஆண்டு முழுவதும் பூஜை நடக்க பலநுாறு ஏக்கர்  நிலங்கள் தானமாக வழங்கப்பட்டன.  தலைமுறைகள் மாறிய நிலையில் இந்த கோவில்களுக்கு வழங்கப்பட்ட நிலங்கள் நேரடி சாகுபடியிலிருந்து  மாறி குத்தகைதாரர்கள் மூலம் சாகுபடி செய்யப்பட்டது. இந்த சாகுபடியில் கிடைக்கும் விளைச்சலில் குறிப்பிட்ட பகுதி அறுவடை முடிந்தவுடன் கோவில்களுக்கு குத்தகையாக செலுத்தப்பட்டன. இன்றும் இந்த நடைமுறை உள்ளது. ஆனால், சில கோவில்களுக்கு குத்தகையும் செலுத்துவதில்லை,  நிலமும் திரும்ப ஒப்படைப்பதில்லை. மடத்துக்குளம் அருகேயுள்ள வேடபட்டி செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. 300 ஆண்டுகளுக்கு முந் தைய பழமையான இந்த கோவிலுக்கு சொந்தமான, 80 ஏக்கர் நிலம் உள்ளது. பல ஏக்கர் நிலங்கள் இருந்தும் முறையான பூஜைகள் இன்றி கோவில்  பூட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், பல ஆண்டுகளுக்கு முன் மிகவும் பிரபலமாகவும், சிறப்பு பூஜைகளும் நடந்த கோவில்,  பலஆண்டுகளாக முறையான பூஜைகள் நடத்தப்படாமல் பூட்டிக்கிடக்கிறது. கோவிலும் பராமரிப்பின்றி உள்ளது. தினசரி பூஜை நடத்த நடவடிக்கை  எடுக்க வேண்டும், என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செவிலிமேடு; சித்திரை மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி சட்டைநாதர் கோவிலில் திருமுலை பால் விழா கோலாகலமாக நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் ... மேலும்
 
temple news
கோவை : தண்டுமாரியம்மன் கோயில் சித்திரை பெருந்திருவிழாவை ஒட்டி, இன்று பக்தர்கள் சக்தி கரகம் ... மேலும்
 
temple news
சிருங்கேரி: சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு இன்று மகா ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவில், சித்திரை மாத பிரம்மோத்சவத்தின் இரண்டாம் நாளான இன்று சூரிய – ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar