Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திண்டுக்கல்லில் வினோத திருவிழா; ... வாராரு... வாராரு... அழகர் வாராரு...மாயமாகும் மைய மண்டபங்கள் மறக்கப்பட்ட விழா மரபுகள் வாராரு... வாராரு... அழகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி கோவிலில் பங்குனி கிருத்திகை விழா; 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
திருத்தணி கோவிலில் பங்குனி கிருத்திகை விழா; 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

11 ஏப்
2016
12:04

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நேற்று நடந்த கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், பொது வழியில் மூலவரை தரிசிக்க, 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

திருத்தணி முருகன் கோவிலில், நேற்று, பங்குனி மாத கிருத்திகை விழாவை ஒட்டி, மூலவருக்கு அதிகாலை, 4:45 மணிக்கு பஞ்சாமிர்தம் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு தங்கவேல், தங்கக் கிரீடம், வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை, 9:30 மணிக்கு காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு, உற்சவர் முருகப் பெருமான், வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் மாடவீதியில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.நேற்று, விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், கிருத்திகை விழா என்பதாலும், வழக்கமான கிருத்திகையை விட, ஆடிக்கிருத்திகை விழாவிற்கு வருகை தரும் பக்தர்கள் பல்லாயிரக்கணக்கானோர் மலைக்கோவிலில் குவிந்தனர். பொது வழி, சிறப்பு நுழைவு கட்டணமாக, 25, 50 மற்றும் 100 ரூபாய் வரிசையிலும் பக்தர்கள் நிரம்பி வழிந்தனர். பொது வழியில், 4 மணி நேரமும், சிறப்பு நுழைவு கட்டணத்தில், குறைந்தபட்சம் ஒன்றரை மணி நேரமும் வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.


சுவர் ஏறி குதித்த பக்தர்கள்: நேற்று நடந்த கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்ததால், சில பக்தர்கள், வி.ஐ.பி., தரிசன நுழைவாயில் அருகில், தடுப்பு சுவர்களில் ஏறி குதித்து உள்ளே சென்றனர். பெண் பக்தர்கள், சிறு குழந்தைகள் உட்பட பலர் ஆபத்தான முறையில் சுவர் ஏறிச் சென்று மூலவரை தரிசித்தனர்; இதை, கோவில் நிர்வாகம் மற்றும் போலீசார் கண்டுகொள்ளவில்லை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; ஐப்பசி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத அம்மாவாசை தீர்த்தவாரி ... மேலும்
 
temple news
கோவை; மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென்திருமலை ஸ்ரீ வாரி ஆலயத்தில் நடந்த வைபவத்தில் அதிகாலையில் ... மேலும்
 
temple news
சிவகங்கை; மா‌னாமதுரை வட்டம் கட்டிக்குளம், ஸ்ரீ சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகள் கோயிலில் அமாவாசையை ... மேலும்
 
temple news
கோவை; கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் ஐப்பசி மாதம் அமாவாசை தினத்தை முன்னிட்டு ஏராளமான மக்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar