மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா: மூன்றாம் நாள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஏப் 2016 11:04
மதுரை: சிறப்பு மிக்க சித்திரை திருவிழாவில், இன்று அன்னை மீனாட்சி காமதேனு வாகனத்திலும், சுந்தரேஸ்வரர் கைலாச பர்வத வாகனத்திலும் எழுந்தருள்கின்றனர்.ராவணன் அகம்பாவம் கொண்டவன். சிவனுக்குரிய கைலாச மலையையே துாக்க முயன்றவன். ஆனாலும், இறைவன் அவனது ஆணவத்தை அடக்கி அருள்செய்தார்.
துன்பம் தருபவர்களுக்கும் இன்பம் அளிக்கும் சுந்தரேஸ்வரர் இன்று பவனி வரும் போது, நாம் பிறருக்கு துன்பம் செய்திருந்தால் அதற்கான மன்னிப்பை வேண்டலாம். அந்தக் கருணைக்கடல் நம்மை ஆட்கொள்வார்.அன்னை மீனாட்சியோ கருணைக் கடல். தன் பிள்ளைகள் தவறு செய்பவர்களாயினும், அவர்களையும் மன்னித்து ஏதேனும் ஒரு வகையில் படியளக்கும்படி சுந்தரேஸ்வரரை துாண்டுபவள். அவள் தேவலோக பசுவும், கேட்டதைத்தருவதுமான காமதேனு மீது பவனி வருகிறாள். அவளிடம் அருளும், பொருளும் வேண்ட மாசி வீதிகளுக்கு இரவு 7 மணிக்கு செல்வோம்.