மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா: நான்காம் நாள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஏப் 2016 11:04
சித்திரை திருவிழாவின் நான்காம் நாளில் மீனாட்சி, சுந்தரேஸ்வரர் தங்கப்பல்லக்கில் சித்திரை வீதிகளில் பவனி வருகின்றனர். இறைவன் படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐந்து தொழில்களைச் செய்கிறார். இதில் மறைத்தல் தொழிலை தங்கப் பல்லக்கு குறிக்கிறது. பல்லக்கின் மேல் உள்ள பெரிய திரைச்சீலை சுவாமியை மறைத்திருக்கும் தொங்கிக் கொண்டிருக்கும் குஞ்சங்களும் காற்றில் அசைந்து சுவாமியை மறைக்கும். நாம் நல்வினை, தீவினைகளைச் செய்ததால் பூமியில் மனிதர்களாக பிறந்திருக்கிறோம். நம் எதிர்காலம் எப்படி அமையும் என்பது நமக்கு தெரியாமல் மறைக்கப்பட்டிருக்கிறது. அதை அறிந்தவர்கள் மீனாட்சியும், சுந்தரேஸ்வரருமே. இதைத்தான் மறைக்கும் திரையும், குஞ்சங்களும் எடுத்துைரக்கின்றன. நமக்கு என்ன நடக்கும் என முன்கூட்டியே தெரிந்து விட்டால், வாழ்வில் சுவாரஸ்யமே இருக்காது. அது மறைவாக இருந்தால் தான் நல்லது. ஆனால் எதிர்காலம் நன்றாக அமைய வேண்டும் என்பதே அனைவரது கருத்தும் ஆகும். அந்த நல்ல வாழ்வை இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரரிடம் கேட்போம்.