Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவெண்காடு சுவேதாரன்யேசுவர ... திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில்  சித்திரை வசந்த உற்சவ விழா துவக்கம் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மஹாராஷ்டிரா திரியம்பகேஷ்வர் கோவிலில் ஆண்களுக்கு மட்டும் தடை நீக்கம்
எழுத்தின் அளவு:
மஹாராஷ்டிரா திரியம்பகேஷ்வர் கோவிலில் ஆண்களுக்கு மட்டும் தடை நீக்கம்

பதிவு செய்த நாள்

12 ஏப்
2016
11:04

நாசிக்: மஹாராஷ்டிராவில் உள்ள, திரியம்பகேஷ்வர் கோவில் கருவறைக்குள் சென்று வழிபாடு நடத்த, ஆண்களுக்கு விதிக்கப்பட்ட தடையை மட்டும் நிர்வாகம் நீக்கியுள்ளது.

மஹாராஷ்டிர மாநிலத்தில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது; அங்கு, அஹமத் நகர் மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற சனி கோவில் உள்ளது. இந்த கோவிலின் கருவறைக்குள் நுழைய அனுமதி கோரி, பெண்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பான வழக்கில், மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அனைத்து கோவில் கருவறைக்குள்ளும் பெண்களை அனுமதிக்க வேண்டும் என, மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, மராட்டிய புத்தாண்டை ஒட்டி, சனி கோவில் கருவறைக்குள் செல்ல பெண்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து, மற்ற கோவில்களிலும் பெண்களை அனுமதிக்க வேண்டும் என, பெண்கள் அமைப்பினர் போர்க்கொடி எழுப்பி வருகின்றனர். இந்த சர்ச்சையால், நாசிக் அருகேயுள்ள திரியம்பகேஷ்வர் கோவிலில், ஆண்களும் கருவறைக்குள் நுழைய, கோவில் நிர்வாகம் தடை விதித்தது; இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

கோவில் பாரம்பரிய நடைமுறையை நிர்வாகம் மாற்றுவதாக, பக்தர்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, ஆண்கள் கருவறைக்குள் நுழைய விதிக்கப்பட்ட தடையை விலக்கி கொள்வதாக, நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பெண்கள் கருவறைக்குள் நுழைய, நுாற்றாண்டு காலம் தடை இருப்பதால், அதை விலக்கிக் கொள்ள முடியாது என, கோவில் நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்தது.

ஜோதிர்லிங்க ஸ்தலம்: நாசிக்கில் உள்ள திரியம்பகேஷ்வர் சிவாலயம், 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் ஒன்று. இந்த கோவிலுக்கு, பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இதனால், இந்த கோவிலில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழிகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில், 108 திவ்யதேசங்களில் 20வது தலமாகவும், 40 ... மேலும்
 
temple news
கோவை: மார்கழி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு, கோவை, உக்கடம் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
கமுதி; கமுதி கோட்டைமேடு ஐயப்பன் கோயிலில் 10ம் ஆண்டு மண்டலபூஜை விழா முன்னிட்டு ஐயப்பன் சாமி ஊர்வலம் ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள அருட்கோட்டம் முருகன் கோவிலில் மகாலட்சுமி சிலையின் கண் ... மேலும்
 
temple news
காரைக்கால்: திருநள்ளாறு சனி பகவான் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமாக உள்ளதா என, கலெக்டர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar