Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சிபுரம் கோவில் பக்தர்கள் ... மஹாராஷ்டிரா திரியம்பகேஷ்வர் கோவிலில் ஆண்களுக்கு மட்டும் தடை நீக்கம் மஹாராஷ்டிரா திரியம்பகேஷ்வர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவெண்காடு சுவேதாரன்யேசுவர சுவாமி கோயில் மஹா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஏப்
2016
11:04

மயிலாடுதுறை: நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடு கிராமத்தில் நால்வரால் பாடப்பட்ட ஸ்ரீ பிரமவித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேசுவர சுவாமி கோயில் உள்ளது.

Default Image
Next News

இத்தலம் காசி க்கு சமமான 6 தலங்களில் ஒன்றாகும். இக்கோயிலில் சிவமூர்த்தி, தீர்த்தம், தலவிருட்சம் மும்மூன்றாக அமைந்துள்ளன. ஆதி சிதம்பரம் என்றழைக்கப்படும் இத்தலத்தில் சிவபெருமா ன் சாந்தகுணமாக 9 தாண்டவங்களை ஆடியுள்ளார். சிவபெருமானின் 64 மூர்த்தி பேதங்களுல் ஒன்றான ஸ்ரீ அகோரமூர்த்தி இங்கு மட்டுமே உள்ளார். சக்தி பீடங்களில் 59வது பீடமா கும். பிரம்ம சமாதி இங்குள்ளது. இத்தலத்தில் சுவாமியை இந்திரன், விஷ்ணு, சூரியன், சந்திரன், அக்னி முதலானோர் வழிபட்டுள்ளனர்.

இக்கோயிலில் நவகிரகங்களில் ஸ்ரீ புதன் பக வான் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கோயிலின் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த நான்காம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு நேற்று காலை 8ம் கால யாகசாலை பூஜைகள் முடிந்து மஹா பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை நடைபெற்றது. 9 மணிக்கு கடம் புறப்பாடு செய்யப்பட்டு கோயிலை வலம் வந்து விமானத்தை அடைந்தது. 10:15 மணிக்கு வேதமந்திரங்கள் ஓத சர்வசாதகம் தெ ட்சணாமூர்த்தி சிவாச்சாரியார் தலைமையிலானோர் சுவாமி, அம்பாள், அகோரமூர்த்தி உள்ளிட்ட அனைத்து கோபுர கலசங்களுக்கும் புனிதநீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.

தொடர்ந்து சுவாமி, அம்பாள், அகோரமூர்த்தி, காளி அனைவருக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்திவைக்கப்பட்டன. பூஜைகளை பட்டாபிராம குருக்கள் தலை மையில் கோயில் அர்ச்சகர்கள் நடத்தி வைத்தனர். இதில் கலெக்டர் பழனிசாமி, இந்து சமய அற நிலையத்துறை இணை ஆணையர் கஜேந்திரன் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு நமச்சிவாயா என கோஷமிட்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து மாலை 7 மணிக்கு திருக்கல்யாணமும், இரவு அகோரமூர்த்தி வீதி உலாவும் நடைபெறுகிறது. சீர்காழி டிஎஸ்பி. வெங்க டேசன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் முருகையன் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், மாமன்னன் ராஜராஜசோழனின் 1040வது சதய விழா அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு,  ... மேலும்
 
temple news
கோவை; ஐப்பசி மாதம் ஏகாதசி விரதத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் கைசிக துவாதசியை முன்னிட்டு நாளை நவ.,2ல் ஏழுமலையான் கருவறையில் இருக்கும் உக்கிர ... மேலும்
 
temple news
சபரிமலை; மண்டல மகர விளக்கு கால பூஜையின் போது பக்தர்கள் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று மாலை 5.00 ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பவித்ர உத்சவம் இன்று முதல் 5 நாட்களுக்கு நடக்கிறது.பட்டர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar