மந்தாரக்குப்பம்: கெங்கைகொண்டான் துாண்டில் வீரன் கோவிலில் புதிதாக அமைக்கப்பட்ட குதிரை வாகனம், பைரவர் வாகனத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது. மந்தாரக்குப்பம், கெங்கைகொண்டான் துாண்டில் வீரன் கோவிலில் புதிதாக அமைக்கப்பட்ட குதிரை வாகனம், குதிரை வீரன், பைரவர் வாகனம், பாம்பு மகுடி வீரன், காவலாளி ஆகிய சிற்பங்களுக்கு கும்பாபிஷேக ஏற்பாடு செய்யப்பட்டது. இதையொட்டி கடந்த 13ம் தேதி இரவு 7:00 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், வாஸ்து சாந்தி முதல் யாக பூஜை நடந்தது. நேற்று காலை 7:45 மணியளவில் இரண்டாவது கால பூஜை, காலை 10:20 மணியளவில் கடம் புறப்பாடு, கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.