பதிவு செய்த நாள்
28
ஏப்
2016
11:04
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகேயுள்ள போடிபாளையம் பத்ரகாளியம்மன் கோவிலில், பூமிதி திருவிழா, கடந்த 11ம் தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து, ஐவர் மலை தீர்த்தம் கொண்டு வருதல், இரவு பூவோடு எடுத்தல், 20ம் தேதி ஆஞ்சநேயர் கோவில் தீர்த்தம் கொண்டு வருதல், பூவோடு எடுத்தல், புண்ணிய ஸ்தலங்களிலிருந்து தீர்த்தம் கொண்டு வருதலும்; புண்ணிய ஸ்தலங்களிலிருந்து தீர்த்தம் எடுத்தல், பூவோடு எடுத்தல், சிக்காட்ட குழுவினரின் வாத்தியம் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்றுமுன்தினம் அம்மன் சப்பரம் ஊர்வலம், மாலை, 5:00 மணிக்கு தர்மராஜா கோவிலில், பச்சை போடுதல், மாலை, 6:00 மணிக்கு பூ குண்டம் திறப்பு விழா, இரவு, 9:00 மணிக்கு சிங்க வாகனத்தில் அம்மன் ஊர்வலமாக வந்து பூ குண்டம் வளர்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. ேநற்று காலை, 7:00 மணிக்கு பூ குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியும் நடந்தது. சிறப்பு பூஜைகளை தொடர்ந்து, விரதமிருந்த பக்தர்கள் வரிசையாக குண்டம் இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினர். காலை, 9:00 மணிக்கு அன்னதானம், மாலை, 4:00 மணிக்கு மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சியும் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று சக்தி கும்பம் கங்கையில் விடுதல், 29ம் தேதி மகா அபிேஷக ஆராதனை, மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.