மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் சக்தி கரகம் ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மே 2016 12:05
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் சக்தி கரகம் ஊர்வலம் நடந்தது. மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசையன்று ஊஞ்சல் உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. சித்திரை மாத அமாவாசையில் மட்டும் சக்தி கரக ஊர்வலம் நடத்துகின்றனர். இதன்படி அமாவாசையை முன்னிட்டு சக்தி கரக ஊர்வலம் நடந்தது. அன்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தங்க கவச அலங்காரமும் செய்தனர். உற்சவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்தனர். இரவு 1 மணிக்கு அக்னி குளத்தில் இருந்து சக்தி கரகம் ஜோடித்து கிராம வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையர்கள் நாகபூஷணி, பிரகாஷ், அறங்காவலர் குழு தலைவர் சேகர், அறங்காவலர்கள் ஏழுமலை, ரமேஷ், கணேசன், செல்வம், சரவணன், மணி மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர். செஞ்சி டி. எஸ்.பி., ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணிகளை செய்தனர்.