கும்பகோணம் வலங்கைமான் வழித்தடத்திலுள்ள மருதாநல்லூரில் கருக்குடிநாதர் கோயில் உள்ளது. திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலம். இங்கு பிராகாரத்தில் வாஸ்து முருகன் என்ற பெயரில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளியுள்ளார். மயிலின் முகம் தெற்குநோக்கி இருக்க, அதன் மூக்கு நிலத்தை நோக்கியுள்ளது. முருகன் செவ்வாய்க்கு அதிபதி. செவ்வாய் நிலத்துக்கு உரியவர். நிலம், வாங்க, வீடு கட்ட, கட்டிய வீடு முழுமைபெற இங்குவந்து முருகனுக்கு அர்ச்சனை செய்கிறார்கள். அதிலும் செவ்வாய்க்கிழமையில் செய்வது சிறப்பு.