கும்பகோணம் பெண்கள் கல்லூரி அருகேயுள்ள ரயில்வே கேட் வழியாகச் சென்றால் புதுச்சேரி என்ற ஊரை அடையலாம். நகரப் பேருந்து தடம் எண் 21ல் அங்கு செல்லலாம். இங்கு 800 ஆண்டுகள் பழமையான பழனியாண்டவர் கோயில் உள்ளது. மேற்குப் பார்த்த சந்நிதி. மூலவர் சிலை பழனியில் உள்ளதுபோலவே இருக்கும். இந்துசமய அறநிலையத்துறை நிர்வாகத்தில் ஒருகால பூஜை மட்டுமே நடக்கிறது.