கன்னிவாடி: தோணிமலை முருகன் கோயிலில் சஷ்டியை முன்னிட்டு பாலாபிஷேகத்துடன் 16 வகை அபிஷேகங்கள் நடந்தது. சுவாமிக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
*தருமத்துப்பட்டி சுப்பிமணியசுவாமி கோயில் மற்றும் கசவனம்பட்டி மவுனகுருசாமிகோயிலில் சஷ்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. * திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமிகோயிலில் சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பால், இளநீர், பன்னீர், சந்தனம், தயிர், திருமஞ்சணம், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. சுற்றுப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.