பக்தர் கூட்டத்தோடு அண்ணாமலையை பவுர்ணமி நாளில் சுற்றி வந்திருப்பீர்கள். அண்ணாமலையாரோடு நீங்கள் கிரிவலம் வர விரும்பினால் ஆண்டுக்கு இருமுறை கிடைக்கும் அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுங்கள். திருக்கார்த்திகைக்கு மறுநாளும், தை மாதம் மூன்றாம் நாளும் சுவாமியே கிரிவலம் வருவார். அண்ணாமலைக்கு அரோகரா சொல்லியபடி சுவாமியோடு மலை சுற்றி வந்தால் பிறவிப்பயனை அடையலாம்.