திருவண்ணாமலை மட்டுமில்லாமல் எல்லா மலைக்கோயிலிலும் பக்தர்கள் பவுர்ணமியன்று கிரிவலம் செல்கின்றனர். அந்தக் காலத்தில் அண்ணாமலையில் தமிழ்மாதப்பிறப்பு நாளில் கிரிவலம் செல்வதை பாக்கியமாகக் கருதினர். சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாதப்பிறப்பன்று பிரவேசிப்பார். சிவபெருமானின் அம்சம் கொண்ட சூரியனின் சஞ்சாரத்தை முக்கியமாகக் கருதி பக்தர்கள் இதனை மேற்கொண்டனர். பிறகு பவுர்ணமி கிரிவலம் பிரபலமானது. இப்போது எல்லா நாட்களும் எந்த நேரமும் அண்ணாமலையை பக்தர்கள் வலம் வந்தபடியே இருப்பது குறிப்பிடத்தக்கது.