Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கைலாசநாதர் கோவிலில் பிரதோஷ சிறப்பு ... பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் மீட்பு: எந்த கோவிலுக்கு சிலைகள் சொந்தம்? பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி கோவில் குளத்தில் எச்சரிக்கை பலகை அமைப்பு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2016
11:06

திருத்தணி: திருத்தணி முருகன்  கோவில் சரவணபொய்கை குளத்தின், ஏழு நுழைவு வாயில்களில் பக்தர்களுக்கு  அறிவிப்பு  மற்றும் எச்சரிக்கை  பலகை வைத்து விழிப்புணர்வு  ஏற்படுத்தியுள்ளனர்.

Default Image
Next News

திருத்தணி முருகன் கோவிலின் மலையடிவாரத்தில் உள்ள  சரவணபொய்கை திருக்குளத்தின்  ஏழு நுழைவு வாயில்களும் முன் அறிவிப்பு இன்றி  பூட்டப்பட்டன. இதனால், பக்தர்கள், குளத்தில்  தங்களது நேர்த்திக்கடனை செலுத்த  முடியாமல்  அவதிப்பட்டனர். நமது நாளிதழில் வெளியான செய்தியையடுத்து, சரவணபொய்கையின் ஒரு நுழைவு  வாயில் திறக்கப்பட்டு பக்தர்கள் குளத்திற்கு  அனுமதிக்கப்பட்டனர்.  பக்தர்கள் வழக்கம் போல் காவடிகள் கழுவியும், புனித நீராடியும் பூஜைகள் நடத்தி  வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று, கோவில் நிர்வாகம், சரவணபொய்கை  குளத்தின் ஏழு நுழைவு வாயில்களில், பக்தர்களுக்கு விழிப்புணர்வு  ஏற்படுத்தும்  வகையில், எச்சரிக்கை பலகையும், அறிவிப்பு பலகையும்  அமைத்துள்ளன. எச்சரிக்கை பலகையில், ‘திருக்குளம் ஆழம் அதிகமாக உள்ளதால்   பக்தர்கள் குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்று குளிக்க வேண்டாம். மீறினால்,  ஏற்படும் விளைவுகள் மற்றும் உயிரிழப்புகளுக்கு கோவில்  நிர்வாகம் பொறுப்பு  ஏற்காது’ என, கூறப்பட்டுள்ளது. அறிவிப்பு பலகையில் கூறப்பட்டுள்ளதாவது: திருக்குளம் துாய்மை மற்றும் பக்தர்கள்   பாதுகாப்பு கருதி, அனைத்து வாயிற்கதவுகளும் இரவு நேரங்களில் பூட்டப்படும்.கிழக்குப்புறம் உள்ள வாயிற்கதவு எண் 2 மட்டும், தினசரி காலை,  6:00 மணி முதல்,  மாலை, 6:00 மணி வரையும், கிருத்திகை மற்றும் விசேஷ நாட்களில், காலை, 6:00  மணி முதல், இரவு, 8:00 மணி வரை, பக்தர்கள்  புனித நீராடுவதற்கு திறந்து  இருக்கும். பக்தர்கள் பாதுகாப்பாக குளிக்க வேண்டும். குளத்தின் நடுபகுதிக்கு  செல்லாமல், படிக்கட்டு அருகாமையி லேயே நீராட வேண்டும். இவ்வாறு  அறிவிப்பு பலகையில் கூறப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் சித்திரை பெருவிழாவில் திருத்தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் உள்ள தாஸபக்த ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.  கோடை வெயில் ... மேலும்
 
temple news
காரைக்கால்: சனிக்கிழமை மற்றும் கோடைவிடுமுறையை முன்னிட்டு இன்று காரைக்கால் சனீஸ்வரபகவான் கோவிலில் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயிலில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வந்த சித்திரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar