Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேணுகோபால சுவாமி கோவிலில் ஊஞ்சல் ... பெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் பெரியாண்டிக்குழி பாலமுருகன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விவசாய கிணற்றில் 12 கருங்கல் சிலைகள் மீட்பு!
எழுத்தின் அளவு:
விவசாய கிணற்றில் 12 கருங்கல் சிலைகள் மீட்பு!

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2016
10:06

திருத்தணி: திருத்தணி அருகே, விவசாய  கிணற்றில் இருந்து, அம்மன், சிவலிங்கம், நந்தி உட்பட, 12 கருங்கல்  சிலைகளை, வருவாய் துறையினர் மீட்டுள்ளனர்.  திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த, ராமகிருஷ்ணாபுரம்  கிராமத்தைச் சேர்ந்த தேசப்ப நாயுடு மகன் லோகநாதன், 45; விவசாயி. இவருக்கு  சொந்தமான விவசாய கிணற்றில், கருங்கல் சிலைகள்  இருப்பதை லோகநாதன் நேற்று பார்த்தார். இதுகுறித்து, செருக்கனுார் கிராம நிர்வாக அலுவலருக்கு, லோகநாதன் தகவல் கொடுத்தார். உடன், செருக்கனுார் வருவாய்  அலுவலர் பார்வதி, கிராம நிர்வாக அலுவலர் பாலச்சந்திரன்,  உதவியாளர் அசோக்  ஆகியோர், மதியம் விவசாய கிணற்றுக்கு சென்று பார்வையிட்டனர்.

தொடர்ந்து கிராமவாசிகள் உதவியுடன், கிணற்றில் இருந்த ஒன்றரை அடி உயரமுள்ள   சிவலிங்கம், 2 அடி உயரமுள்ள இரண்டு துவாரக பாலகர்கள், சாமுண்டீஸ்வரி  அம்மன், 1 அடி உயரமுள்ள நந்தி, ஒன்றரை அடி நீளமுள்ள ஐந்து பீடங்கள்  மற்றும் இரண்டு பலிபீடங்கள் போன்றவற்றை மீட்டனர்.  மீட்கப்பட்ட சிலைகளை, திருத்தணி  தாசில்தார் அலுவலகத்திற்கு, வருவாய் துறையினர், சரக்கு ஆட்டோவில் கொண்டு  சென்றனர்.  எங்கள் கிராமத்தில் கிடைத்த சிலைகளை எங்களுக்கே வழங்க வேண்டும்  என, கிராமவாசிகள் வருவாய் துறையினரிடம் கோரிக்கை வைத்தனர். தகவல் அறிந்ததும், திருத்தணி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து வருகின்றனர். சென்னையில், சிலைகள் கடத்தல் வழக்கில் சிலர் கைது செய்யப்பட்டதை  தொடர்ந்து, விவசாய கிணற்றில் இந்த சிலைகளை மர்ம நபர்கள் வீசி சென்றனரா  என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவொற்றியூர்: வட்டப்பாறையம்மன் ஏழு நாள் உத்சவம் கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: நவதிருப்பதி ஸ்தலங்களில் முதலாவது கோவிலான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் சித்திரை ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவரவர் சன்னதியில்  ஏப்.,17 ல் ஜெயந்தன் ... மேலும்
 
temple news
சபரிமலை : சித்திரை மாத பூஜை, விஷு கனி தரிசனத்திற்காக சபரிமலை கோவில் நடை இன்று ஏப்., 11 மாலை 5:00 மணிக்கு ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், நேற்று அம்மன் ஊஞ்சல் உற்சவம், ஸ்ரீ லலிதா திரிசதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar