பெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜூன் 2016 11:06
புதுச்சத்திரம்: பெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில் கார்த்திகையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு 7.00 மணிக்கு பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இரவு 9.00 மணிக்கு பாலமுருகன் சுவாமி அலங்கரிக்கப்பட்டு, திருத்தேரில் கோவிலை வலம் வந்தார். இரவு 10.00 மணிக்கு பாலமுருகன், விநாயகர், அம்மன் ஆகிய சுவாமிகள் ஊஞ்சலில் எழுந்தருளச் செய்து, தாலாட்டு பாடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.