Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அண்ணன்பெருமாள் கோயில் ... விளாச்சேரி பட்டாபிஷேக ராமர் கோயிலில் சீதா கல்யாணம்! விளாச்சேரி பட்டாபிஷேக ராமர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பம்பையை தூய்மை படுத்த ரூ.1000 கோடியில் திட்டம்!
எழுத்தின் அளவு:
பம்பையை தூய்மை படுத்த ரூ.1000 கோடியில் திட்டம்!

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2016
05:06

சபரிமலை: சபரிமலையை தேசிய வழிபாடு மையமாக மாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பம்பையை தூய்மையாக பராமரிக்க ஆயிரம் கோடி ரூபாய் செலவில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய உயர் மட்ட குழுவினர் கேரள முதல்வரை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

சபரிமலையை தேசிய வழிபாடு மையமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்காக கேரள மாநில அரசும், திருவிதாங்கூர் தேவசம்போர்டும் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. ஆனால் இவ்வாறு அறிவிப்பதில் நடை சிக்கல் இருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டு ஸ்தலங்களை தேசிய வழிபாட்டு மையமாக அறிவிக்கும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வழிபாட்டு மையங்களை இணைத்து சுற்றுலா திட்டம் தயாரிக்கும் போது அதில் சபரிமலையை இணைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. எனினும் பம்பையை தூய்மைõக பராமரிக்க மத்திய அரசு கங்கை ஆக்ஷன் பிளான் மாடலில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ஒரு திட்டத்தை தயாரித்துள்ளது.

மண்டல மகரவிளக்கு காலத்தில் பம்பையை அசுத்தம் செய்யாமல் பாதுகாப்பது, பக்தர்களுக்கு கூடுதல் தண்ணீர் கிடைக்க குன்னாறு அணை நீர்மட்டத்தை உயர்த்துவது, கழிவு நீர் பம்பையில் வந்து சேருவதை தடுப்பது, பம்பையிலும் சன்னிதானத்திலும் தேவையான அளவு கழிப்பறைகள் கட்டுவது, பம்பையில் துணிகள் வீசுவதை தடுப்பது போன்றவை இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்களாகும். இதற்காக மத்திய நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் ஜெ.சி.அய்யர் தலைமையில் ஐந்து பேர் குழுவினர் பம்பை ஆறு பாயும் இடங்களை பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் திருவனந்தபுரத்தில் முதல்வர் பிணறாயி விஜயன் மற்றும் மாநில அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். மண்டல மகர விளக்கு காலத்தில் பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் பணிகளை செய்ய வேண்டும் என்று முதல்வர் ஆலோசனை தெரிவித்தார். 15 நாட்களுக்குள் வரைவு அறிக்கை மாநில அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று மத்திய குழுவினர் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தில் இன்று மோகினி ... மேலும்
 
temple news
திருப்பதி;  ஜனாதிபதி திரௌபதி முர்மு திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி இன்று தரிசனம் ... மேலும்
 
temple news
டில்லி; டில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ ... மேலும்
 
temple news
கோவை;  கார்த்திகை மாதம் அனுஷம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம் கே. எஸ். ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, கோர்ட் உத்தரவை பின்பற்றி, கோவிலை இடிக்கச் சென்ற அதிகாரிகளுடன், பொதுமக்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar