சேலம்: அயோத்தியாப்பட்டணம் கோதண்டராம சுவாமி கோவிலில், நேற்று திருக்கல்யாணம் மற்றும் பட்டாபிஷேக மஹோத்ஸவ விழா நடந்தது. காலை, 7 மணிக்கு கோமாதா பூஜையுடன் பால்குட ஊர்வலம் நடந்தது. பின், மூலவருக்கு அபிஷேகம் நடந்தது. 9 மணிக்கு, மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டார் சீர்வரிசை அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. அதையடுத்து, காலை, 10 மணிக்கு, சுவாமிக்கு திருக்கல்யாணம் செய்யப்பட்டு, பட்டாபிஷேகம் சாத்தப்பட்டது. அதில், 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.