திருப்பரங்குன்றம் கோயிலில் ஊஞ்சல் திருவிழா துவங்கியது!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூன் 2016 12:06
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆனி ஊஞ்சல் திருவிழா நேற்று துவங்கியது. உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு சிறப்பு அலங்காரமாகி ஆஸ்தான மண்டபத்தை வலம்வந்து திருவாட்சி மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த ஊஞ்சலில் எழுந்தருளினர். அங்கு கோயில் ஓதுவார்களால் தேவாரம் பாடப்பட்டு, 30 நிமிடங்கள் சுவாமி ஊஞ்சல் ஆடும் நிகழ்ச்சி முடிந்து தீபாராதனை நடந்தது. ஜூன் 18 வரை ஊஞ்சல் விழா நடக்கும்.