நெட்டப்பாக்கம்: கரியமாணிக்கம் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நேற்று நடந்தது. நெட்டப்பாக்கம் கொம்யூன் கரியமாணிக்கம் கிராமத்தில் அமைந்துள்ள திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 7 ம் தேதி துவங்கியது. அன்று மாலை 6 மணிக்கு துஜாரோகனம் நிகழ்ச்சியும், கடந்த 8ம் தேதி திரவுபதியம்மன் திருக்கல்யாணமும், நேற்று முன்தினம் சக்தி கரகம் நிகழ்ச்சி நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று நடந்தது. இதில் நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடனை செலுத்தினர். இன்று காலை 9 மணிக்கு அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.