மேலுார்: மேலுாரில் திரவுபதியம்மன் கோயில் பூக்குழி திருவிழா மே 20ல் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. நகை மற்றும் அடகு கடை உரிமையாளர் சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று(ஜூன் 15) மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைகிறது.