திருவாடானை: திருவாடானை அருகே அதங்குடி மற்றும் நெய்வயல் கிராமங்களில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாக்கள் நடந்தது. பக்தர்கள் பால், பறவை காவடி எடுத்தும், பூக்குழி இறங்கியும் நேர்த்திக் கடன் செலுத்தினர். மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடந்தது. இரவில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.