Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! சாத்தை., திரு இருதய அன்னை ஆலய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலையப்பபுரம் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 செப்
2011
10:09

ஆழ்வார்குறிச்சி :திருமலையப்பபுரம் செல்வவிநாயகர் கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நேற்று கோலாகலமாக நடந்தது. திருமலையப்பபுரத்தில் ராமநதி வடக்கு கரையில் செல்வவிநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் நேற்று முன்தினம் காலை 5 மணிக்கு அனுக்ஞை, கணபதி பூஜை, மகா கணபதி ஹோமம், பிரம்மசாரி பூஜை, நவக்கிரக ஹோமம், பூர்ணாகுதி ஆகிய வைபவங்களுடன் துவங்கியது. மாலை 5 மணிக்கு 1ம் கால யாகசாலை பூஜையும், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, தீர்த்த சங்கிரகணம், யஜமான வர்ணம், ஆர்ச்சார்ய வர்ணம், ரக்ஷாபந்தனம், கும்ப அலங்காரம் ஆகியன நடந்தது. இரவு 9 மணியளவில் யாகசாலை பிரவேசமும், யாகசாலை பூஜைகளும், யந்திர ஸ்தாபனமும், அஷ்டபந்தன மருந்து சாத்துதலும் நடந்தது. இரண்டாம் நாளான நேற்று காலை 7 மணியளவில் 2ம் கால யாகசாலை பூஜையும், ஸ்பரிசாகுதி, மகா பூர்ணாகுதி தீபாராதனையும் நடந்தது. பின்னர் கடையம் கே.எஸ்.முத்துக்குமார் பட்டர், சங்கர்நகர் பாலசுப்பிரமணிய பட்டர், சேரன்மகாதேவி ராஜ் பட்டர், ரவணசமுத்திரம் கிருஷ்ணபட்டர் சிறப்பு பூஜைகளை நடத்தினர். யாத்ரா தானம், கும்பம் எழுந்தருளல், அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ஆகியன நடந்தது. தொடர்ந்து மகா அபிஷேகமும், அன்னதானமும் நடந்தது. கோயில் பூஜைகளை ஓதுவார் முப்புடாதியும், கும்பாபிஷேகம் நடக்கும் போது பொட்டல்புதூர் கவுன்சிலர் பழனி தேவாரமும் பாடினார். விழாவில் செல்வவிநாயகர் கோயில் விழாக் கமிட்டியினர் மற்றும் திருமலையப்பபுரம், பொட்டல்புதூர், கடையம், முதலியார்பட்டி உட்பட சுற்றுவட்டார மக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை செல்வவிநாயகர் கோயில் கும்பாபிஷேக விழாக் கமிட்டியினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவா: இந்தியாவின் மிக உயரமான ஸ்ரீராமரின் வெண்கல சிலையை கோவாவின் ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பரதகாலி ... மேலும்
 
temple news
உடுப்பி; உடுப்பியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண மடத்தில் பிரதமர் மோடி தரிசனம் தரிசனம் செய்தார். தொடர்ந்து ... மேலும்
 
temple news
மும்பை; காஞ்சி பீடாதிபதி பூஜ்யஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று காலை மும்பையில் உள்ள ஸ்ரீ ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் விழாவில் 5ம் நாளானா காலை  உற்சவத்தில் கண்ணாடி ... மேலும்
 
temple news
பழநி: பழநியில் திருகார்த்திகை தீபத்திருவிழா துவங்கியது.பழநி முருகன் கோயிலில் நேற்று (நவ.,27) மாலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar