சொர்க்கம் என்றால் ஒன்று தானே என நினைக்கலாம். ஆனால், அங்கும் நான்கு வகை இருக்கிறது. சொர்க்கத்தின் வாசலில் நுழைவதை ஸாலோக்ய மோட்சம் என்பர். பின்னர் தெய்வம் குடியிருக்கும் வீட்டுக்குள் சென்று தெய்வத்தின் அருகில் போய் நிற்பது ஸாமீப்ய மோட்சம். இதையடுத்து அத்தெய்வத்தை கண்கொட்டாமல் பார்த்து அப்படியே உருகி, அந்த உருவமாகவே மாறிவிடுவது ஸாரூப்ய மோட்சம். அந்த தெய்வத்துடன் ஒன்றி அதனுடன் கலந்து விடுவது ஸாயுஜ்ய மோட்சம். இவற்றையெல்லாம் பார்க்க வேண்டுமானால், இங்கே கொஞ்சமாவது புண்ணியம் செய்ய வேண்டும். நல்லதை மட்டுமே மனதில் நினைக்க வேண்டும்.