பெரும்பாலான பெருமாள் கோவில்களில், ஆண்டாள் தனிச்சன்னிதியில்தான் இருப்பாள். ஆந்திர மாநிலம், சித்துõர் மாவட்டம் நகரி அருகில் உள்ள தெரணி வைகுண்டநாதர் கோவிலில் இவளை பெருமாள் சன்னிதிக்குள்ளேயே தரிசிக்கலாம். கிருஷ்ண தேவராயர் ஆட்சிக்காலத்தில் இங்கு வசித்த பக்தர் ஒருவர், பெருமாளுக்கு கோவில் எழுப்ப ஆசை கொண்டார். தன் விருப்பத்தை மன்னரிடம் தெரிவித்தார். அவரும் சம்மதிக்கவே இங்குள்ள குசத்தலை ஆற்றின் கரையில் கோவில் எழுப்பப்பட்டது. சுவாமிக்கு ‘வைகுண்டநாதன்’ என பெயர். சுவாமியுடன் ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள், நம்மாழ்வார் காட்சி தருகின்றனர். பெருமாளுடன் இரண்டு ஆழ்வார்களை சன்னிதிக்குள்ளேயே தரிசனம் செய்வது அபூர்வம். செவ்வாய் தோஷத்தால் திருமணத்தடை உள்ளவர்கள் இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.