சென்னை எர்ணாவூர், அன்னை சிவகாமி நகரில் பீலிக்கான் முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி கோயில் அமைந்துள்ளது. ஆரோக்கியத்தில் குறைபாடு உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் நிவாரணம் கிட்டும். குறிப்பாக, வயிற்றுவலியால் அவதிப்படுவோர் தரையில் படுத்து தங்கள் வயிற்றின்மீது மாவிளக்கு ஏற்றி வைத்து அம்மனை வழிபட்டு நற்பலன் பெறுகின்றனர்.