பொதுவாக மாரியம்மன் கோயில்களில் பண்டிகைக் காலங்களில் காப்புக்கட்டி கம்பம் திருவிழா முடிந்ததும் கம்பத்தை எடுத்துவிடுவார்கள். ஆனால் நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் மாரியம்மன் கோயில் வருடம் முழுவதும் கம்பம் நடப்பட்டிருக்கும் சிறப்பு பெற்றிருக்கிறது. இதனால் இந்த அன்னை, நித்ய சுமங்கலி மாரியம்மன் என அழைக்கப்படுகிறாள்.