பதிவு செய்த நாள்
12
ஜூலை
2016
11:07
கடலுார்: கடலுார் வில்வநகர் திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த 9ம் தேதி காலை 8:00 மணிக்கு அனுக்ஞை, கணபதி ஹோமம், 12:00 மணிக்கு புதிய பிம்பங்கள் கரிக்கோலம், மாலை 5:00 மணிக்கு வாஸ்து சாந்தி, ரக்ஷாபந்தனம், கும்ப அலங்காரம், முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. 10ம் தேதி காலை 9:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, 108 மூலிகை ஹோமம், மாலை 6:00 மணிக்கு மூன்றாம் கால யாக சாலை பூஜையும், இரவு 9:30 மணிக்கு அஷ்டபந்தன சாற்றுதல் நடந்தது. கும்பாபிஷேக தினமான நேற்று காலை 7:00 மணிக்கு விநாயகர் பூஜை, 108 மூலிகை ஹோமம், யாத்ராதானம், கடம் புறப்பாடாகி, 9:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இரவு அம்மன் வீதியுலா நடந்தது.