சின்னாளபட்டி: சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில், சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக மூலவர், சதுர்முக முருகனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. சுற்றுப்புற கிராமங்களைச்சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். * கன்னிவாடி அருகே தோணிமலை முருகன் கோயில், தருமத்துப்பட்டி சுப்பிரமணியசுவாமி கோயிலில் சஷ்டி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.