பதிவு செய்த நாள்
18
ஜூலை
2016
11:07
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பகுதி சிவன் கோவில்களில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் திருநீற்றம்மை சமேத செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் ஆடி மாத முதலாம் பிரதோஷ வழிபாட்டையொட்டி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தி தங்க கவசங்கள் அணிவித்து நாகாபரண அலங்காரம் செய்து வைக்கப்பட்டது. இதேபோல் கள்ளக்குறிச்சி சிவகாமசுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர், நீலமங்கலம் காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர், கமலா நேரு தெரு காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர், ஏமப்பேர் காசி விசாலாட்சி சமேத விஸ்வநாதேஸ்வரர், சோமண்டார்குடி சோமநாதீஸ்வரர், வடக்கநந்தல் உமாமகேஸ்வரர் கோவில்களிலும் ஆடிமாத முதலாம் பிரதோஷ சிறப்பு வழிபாடு தேவாரம், திருவாசகம் பாடி நடத்தப்பட்டது. சின்னசேலம் : தென்பொன்பரப்பி சொர்ணாம்பிகை சமேத சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாட்டையொட்டி மூலவருக்கு சிறப்பு அலங்காரம், நந்தீஸ்வரருக்கு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் பூஜைகள் நடத்தி மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சின்னசேலம் கங்காதீஸ்வரர், ராயர்பாளையம் குமாரதேவர் மடம் பழமலைநாதர், கூகையூர் சொர்ணபுரீஸ்வரர், அசலகுசலாம்பிகை சமேத பஞ்சாட்சரநாதர் கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.