Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சத்ய சாயி சேவா சமிதி சார்பில் ... வால்பாறை காசிவிஸ்வநாதர் கோவிலில் பிரதோஷ பூஜை வால்பாறை காசிவிஸ்வநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பவானியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்: சுகாதாரம் இன்றி அவதி!
எழுத்தின் அளவு:
பவானியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்: சுகாதாரம் இன்றி அவதி!

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2016
12:07

ஊத்துக்கோட்டை: ஆடி மாதம் துவங்கிய நிலையில், பெரியபாளையம் பவானியம்மன் கோவிலில் முதல் ஞாயிற்றுக்கிழமை ஆன நேற்று, அதிகளவு வாகனங்கள் குவிந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், மேம்பாலத்தின் நடைபாதையில் வீசும் துர்நாற்றத்தால் பக்தர்கள் அவதிப்பட்டனர். பெரியபாளையம் பவானியம்மன் கோவிலில் நடக்கும் விழாக்களில் ஆடி மாத விழா முக்கியமானது. இந்த மாதத்தில் துவங்கும் முதல் ஞாயிற்றுக்கிழமை முதல், 13 வாரங்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். நேற்று, முதல் ஞாயிற்றுக்கிழமையை ஒட்டி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் நாகலாபுரம், பிச்சாட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் குடும்பத்துடன் குவிந்தனர். கார், வேன், சரக்கு வாகனங்களில் திரளான பக்தர்கள் குடும்பத்துடன் சென்றனர். இவர்கள், நேற்று முன்தினம் இரவு, பெரியபாளையத்தில் குவிந்தனர். காலையில் இவர்கள் அம்மனை தரிசிக்கும் முன் மொட்டை அடித்தல், வேப்ப இலை ஆடை அணிதல் உள்ளிட்ட நேர்த்திக் கடனை செலுத்தினர்.

ஊத்துக்கோட்டை அடுத்த, புதுக்குப்பம் கிராமத்தில் இருந்து பெண்கள் பாதயாத்திரையாக கோவிலுக்கு சென்றனர். ஆரணி ஆற்றின் மேல் உள்ள மேம்பாலத்தில் பாதசாரிகள் நடந்து செல்லும் இடத்தில் கழிவுநீர் துர்நாற்றத்தாலும், கால்நடைகள் இயற்கை உபாதைகளை கழித்ததாலும், கோவிலுக்கு சென்ற பக்தர்கள் மூக்கை மூடிக்கொண்டு சென்றனர். வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் குப்பை அகற்றாமல் தேங்கியுள்ளது பக்தர்களை முகம் சுளிக்க வைத்தது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக எல்லாபுரம் ஒன்றியம் சார்பில், சுகாதார துறைக்கு நிதி வழங்கும் நிலையில், பக்தர்களின் சுகாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.

பெரியபாளையம் பவானியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்குத் தேவையான வசதிகள் செய்ய, சுகாதாரம், ஊராட்சி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இங்கு தேங்கியுள்ள குப்பை, துர்நாற்றம் வீசும் இடங்கள் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இனி வரும் நாட்களில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். பூவை.சீதாலட்சுமி பி.டி.ஓ., எல்லாபுரம்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மகா சம்ஸ்தானம் சிருங்கேரி பீடாதிபதி ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் மாசித்திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு‌ ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar