Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குருவித்துறை குருபகவான் கோயிலில் ... அமர்நாத் புனித யாத்திரை; 2 லட்சம் பேர் தரிசனம் அமர்நாத் புனித யாத்திரை; 2 லட்சம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக்குண்டம் கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக்குண்டம் கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2016
11:07

மேட்டுப்பாளையம்: வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிக்குண்டம் விழாவில், நேற்று கொடியேற்றம் நடந்தது. மேட்டுப்பாளையம், வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக்குண்டம் விழா கடந்த, 19ல் பூச்சாட்டுடன் துவங்கியது. நேற்று காலை கொடியேற்றம் விழா நடந்தது. முன்னதாக யாகசாலை அமைத்து, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மேட்டுப்பாளையம் சுப்ரமணியசாமி கோவில் அர்ச்சகர்கள் கலச பூஜை, கணபதி ஹோமம் செய்தனர். சிங்க உருவம் போட்ட இரண்டு கொடிகளை, தேக்கம்பட்டி ஊர் மக்கள் மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்து வந்தனர். பவானி ஆற்று கரையோரம் முத்தமிழ் விநாயகர் கோவிலில், கொடிகளுக்கு பூஜை செய்து, கோவிலுக்கு எடுத்து வந்தனர். திரளான பக்தர்கள் உடன் வந்தனர். யாகசாலையில் கொடிகளை வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். கோவில் முன்புள்ள கொடிமரத்தில் ஒரு கொடியையும், மற்றொரு கொடியை பச்சை மூங்கிலில் கட்டி, பந்தல் முன்பும் நிறுத்தினர்.

உதவி ஆணையர் ராமு, பரம்பரை அறங்காவலர் வசந்தா, பூசாரிகள் பரமேஸ்வரன், ஆனந்தன், கோவில் ஊழியர்கள் பங்கேற்றனர். இன்று இரவு பொங்கல் வைத்து குண்டம் திறப்பும், நாளை காலை, 6:00 மணிக்கு குண்டம் இறங்குதலும் நடக்க உள்ளது. உதவி ஆணையர் ராமு கூறுகையில், “குண்டத்தை முன்னிட்டு, அரை கி.மீ., முன்னதாகவே வாகன போக்குவரத்து நிறுத்தப்படும். நவீன மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. எல்.சி.டி., டிவிக்கள் பல இடங்களில் அமைக்கப்படுகின்றன. கூடுதல் ஆம்புலன்ஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆற்று படித்துறையில், தீயணைப்பு வீரர்கள், பரிசல் இயக்குவோர் தயார்நிலையில் இருப்பர். மொபைல் கழிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது,” என்றார். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: ஆண்டுதோறும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்குப் பிறகு வரும் 3வது திதியான அட்சய ... மேலும்
 
temple news
மதுரை: கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள காலடி ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் அட்சய திருதியை விழாவை ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் அபிராமி அம்மன்உடனமர் காளஹஸ்தீஸ்வரர், ஞானாம்பிகை உடனமர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar