Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செல்லாண்டியம்மன் ஆடி குண்டம் விழா: ... சதுரகிரி ஆடி அமாவாசை : மது, புகையிலைக்கு தடை சதுரகிரி ஆடி அமாவாசை : மது, ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி முருகன் கோவில் ஆடிக்கிருத்திகை விழா துவங்கியது
எழுத்தின் அளவு:
திருத்தணி முருகன் கோவில் ஆடிக்கிருத்திகை விழா துவங்கியது

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2016
11:07

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், நேற்று, ஆடிக்கிருத்திகை விழா ஆடி அஸ்வினியுடன் துவங்கியது. இதில், திரளான பக்தர்கள் மலைக்கோவிலுக்கு வந்து மூலவரை தரிசித்தனர். திருத்தணி முருகன் கோவிலில், ஆடிக்கிருத்திகை மற்றும் மூன்று நாள் தெப்பத் திருவிழா, நேற்று, ஆடி அஸ்வினியுடன் விழா துவங்கியது. அதிகாலை, 4:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பச்சை மாணிக்கம், தங்கவேல், தங்ககீரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. மாலை, 6:00 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன், மலைப் படிகள் வழியாக சரவணபொய்கை திருக்குளத்திற்கு வந்து, மூன்று முறை குளத்தை சுற்றி வலம் வந்தார். தொடர்ந்து, மலைக்கோவிலுக்கு உற்சவர் சென்றபின், மூலவருக்கு மீண்டும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் காவடி களுடன் வந்து மூலவரை தரிசித்தனர்.

இன்று ஆடிப்பரணியும், நாளை, ஆடிக்கிருத்திகை மற்றும் முதல் நாள் தெப்ப திருவிழாவும் நடக்கிறது. தெப்பலில், மாலை, 4:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை, திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவிலின் நாதஸ்வர இன்னிசை கச்சேரி நடைபெறும். நாளை மறுநாள் (29ம் தேதி) இரண்டாம் நாள் தெப்ப திருவிழாவில், மாலை, 4:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை, திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவிலின் நாதஸ்வர இன்னிசை கச்சேரியும், இரவு, 7:00 மணிக்கு புஷ்பவனம் குப்புசாமி குழுவினரின் பக்தி இன்னிசையும் நடைபெறும். வரும், 30ம் தேதி, மூன்றாம் நாள் தெப்ப திருவிழாவில், மாலை, 4:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை, திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவிலின், நாதஸ்வர இன்னிசை கச்சேரியும், இரவு, 7:00 மணிக்கு வீரமணிதாசன் குழுவினரின் பக்தி இன்னிசை கச்சேரியும் நடைபெறும். மூன்று நாட்களும் தெப்பலில் உற்சவர் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி சரவணபொய்கையில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் ஒன்றிணைந்து செய்து வருகின்றனர். இன்று முதல், நாளை இரவு வரை, மலைக்கோவிலுக்கு இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கார், வேன் போன்ற நான்குசக்கர வாகனங்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில், பாஸ் வழங்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அழகர்கோவில்: மதுரை வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தபின், அழகர்கோவில் திரும்பிய ... மேலும்
 
temple news
திருக்கோஷ்டியூர்; திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் அஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி கோயிலில் ... மேலும்
 
temple news
சங்கடஹர சதுர்த்தியையொட்டி, கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.விருத்தாசலம் ... மேலும்
 
temple news
பழநி; பழநியில் 18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சிவகங்கைச் சீமை செப்பேடு கண்டுபிடிக்கப்பட்டது, இதில் பழநி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் 13ம் நாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar