சிதம்பரம்: சிதம்பரம் காயத்ரி அம்மன் கோவிலில் உள்ள கற்பூரநாக காளியம்மன் கோவிலில் ஆடி உற்சவத்தையொட்டி திருவிளக்கு பூஜை நடந்தது. கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையொட்டி தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, அலங்காரம், மகா தீபாராதனை நடக்கிறது. இரவு சுவாமி வீதியுலாவும், சொற்பொழிவும் நடக்கிறது. நேற்று முன்தினம் இரவு திருவிளக்கு பூஜை நடந்தது. பூஜையில், 200க்கும் ÷ மற்பட்ட பெண்கள் குத்துவிளக்கு ஏற்றி மலர்கள் துாவி சிறப்பு வழிபாடு செய்தனர்.