தர்மபுரி: தர்மபுரி அடுத்த அதியமான்கோட்டை தட்சிண காசி காலபைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு நேற்று ஸ்வர்ண அலங்காரத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேர்த்திக்கடனாக சாம்பல் பூசணியில் தீபமேற்றி ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.