பதிவு செய்த நாள்
28
ஜூலை
2016
05:07
கோவை: ஆடிக்கிருத்திகை முன்னிட்டு, கோவையில் உள்ள முருகன் கோவில்கள் மற்றும் சன்னதிகளில், சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர்.
மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில், காலை சுவாமிக்கு, பால், நெய், சந்தனம், ஜவ்வாது, பன்னீர், இளநீர் அபிேஷகம் செய்யப்பட்டது. சுப்ரமணியர், ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவையில் மிகவும் பிரசித்தி பெற்ற மருதமலை சுப்ரமணியரை தரிசிக்க காலை முதல் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். காந்திபார்க், சுக்கிரவார்பேட்டையில் உள்ள பாலதாண்டாயுதபாணி கோவிலில், சுவாமிக்கு பல்வேறு திரவியங்களில் அபிேஷகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில், சுவாமி அருள்பாலித்தார். பொள்ளாச்சி ரோடு, சுந்தராபுரத்தில் உள்ள திருமூர்த்தி கோவிலில் உள்ள, முருகன் சன்னதியில் சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜை நடந்தது. திருச்சி ரோடு, ராமநாதபுரத்தில் உள்ள, வேல்முருகன் கோவிலில், மாலை, 4:30 மணிக்கு சுவாமிக்கு அபிேஷகம், அலங்கார பூஜை நடந்தது. சாய்பாபா காலனியில் உள்ள பாலமுருகன் கோவில், போத்தனுார், கடைவீதியில் உள்ள, அருள் முருகன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் அமைந்துள்ள முருகன் சன்னதிகளில் ஆடிக்கிருத்திகை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.