பதிவு செய்த நாள்
29
ஜூலை
2016
12:07
கடலுார்: வண்டிப்பாளையம் எல்லை காளியம்மன் கோவிலில் வேம்பு அரசு திருக்கல்யாணம் நடந்தது. கடலுார், பழைய வண்டிப்பாளையம், காளவாய் தெருவில் அமைந்துள்ள எல்லைக் காளியம்மன் கோவிலில் இன்று 29ம் தேதி செடல் திருவிழா நடக்கிறது. இதற்கான விழா நேற்று ÷ வம்பு அரசு திருக்கல்யாணத்துடன் துவங்கியது. அதனையொட்டி, நேற்று காலை 8:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம் நடைபெற்றது. தொடர்ந்து, எல்லைக் காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மகா தீபாராதனை, காலை 11:00 மணிக்கு வேம்பு அரசு திருக்கல்யாண உற்சவமும், இரவு காப்பு கட்டுதல் மற்றும் எல்லை கட்டும் உற்சவம் நடந்தது. இன்று காலை ஊற்றுகாட்டு மாரியம்மன் கோவிலில் இருந்து கரகம் வீதியுலாவும், பகல் 1:00 மணிக்கு அம்மனுக்கு 1,008 குடம் நீர் அபிஷேகம், மகா தீபாராதனை மற்றும் சாகை வார்த்தலும், அதனைத் தொடர்ந்து மாலை 4:30 மணிக்கு செடல் உற்சவமும், இரவு அம்மன் வீதியுலா நடக்கிறது.