கோயில் கடைகளுக்கு கூடுதல் வாடகை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜூலை 2016 12:07
மதுரை: கோயில் கடைகளுக்கு கூடுதல் வாடகை நிர்ணயம் செய்யும் நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய வாடகைதாரர்கள் வலியுறுத்தினர்.தமிழ்நாடு திருக்கோயில் கடைகள் கட்டட வாடகைதாரர்கள் நலச் சங்கங்களின் பேரமைப்பின் மாநில நிர்வாகிகள் கூட்டம் மதுரையில் நடந்தது. தலைவர் ராஜாங்கம் தலைமை வகித்தார். பொருளாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.பேரமைப்பு செயலாளர் வெள்ளிமலை பேசியதாவது: அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் மாநிலம் முழுவதும் 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறிய, பெரிய கோயில்கள் உள்ளன. கோயில் கடைகள், கட்டடங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வாடகை செலுத்தி வணிகம் செய்கின்றனர். வாடகையை நிர்ணயிக்கும் போது வாடகைதாரர்களின் கருத்துக்களை அதிகாரிகள் கேட்பதில்லை. கோயில் நிர்வாகம் சார்பில் கடைகள் பராமரிப்பு செய்வதில்லை. வாடகைதாரர்கள் தங்கள் சொந்த செலவில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்கின்றனர். நியாய வாடகை நிர்ணயம் செய்ய வாடகைதாரர்களின் கருத்துக்களை கேட்க வேண்டும். வாடகைதாரர் பலர் கோயிலுக்கு நன்கொடை வழங்குகின்றனர். நியாய வாடகையை அதிகாரிகள் நிர்ணயிக்க வேண்டும். வாடகை நிர்ணயம் மற்றும் பெயர் மாற்றம் செய்யும்போது அரசாணை 45ன்படி 15 சதவீத வாடகையை கூடுதலாக செய்து வாடகைதாரர்களாக நடைமுறைப் படுத்த வேண்டும், என்றார். நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், ராஜநாகுலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.