பதிவு செய்த நாள்
30
ஜூலை
2016
12:07
பொள்ளாச்சி : பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், ஆடி கிருத்திகையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பொள்ளாச்சி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், ஆடி கிருத்திகையொட்டி முருகனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆடி கிருத்திகையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதுபோன்று, பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடந்தது. வால்பாறை: வால்பாறை மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், ஆடிவெள்ளியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. வால்பாறை அண்ணாநகர் முத்துமாரியம்மன் கோவிலில், ஆடி மாத இரண்டாவது வெள்ளிக்கிழமையான நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், அலங்காரபூஜையும் நடந்தது. எம்.ஜி.ஆர். நகர் மாரியம்மன் கோவில், வாழைத்தோட்டம் காமாட்சியம்மன் கோவில், சிறுவர் பூங்கா சக்திமாரியம்மன் கோவிலில் பூஜைகள் நடைபெற்றன. இதே போல், கவர்க்கல் காமாட்சி அம்மன் கோவில், ஈட்டியார் மாரியம்மன்கோவில், சிறுகுன்றா மாகாளியம்மன்கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் ஆடி மாத சிறப்பு வழிபாடு நடந்தது.