பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி சிவன் கோவில்களில், நேற்று பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது. பிரதோஷ தினமான நேற்று, பொள்ளாச்சி சுப்பிரமணியர் கோவில், ஐயப்பன் கோவில், ஜோதி நகர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவில், தேவம்பாடி வலசு அம்மணீஸ்வரர் கோவில், கப்பளாங்கரை பரமசிவன் கோவில், பட்டணம் சிவன் கோவில், தேவனாம்பாளையம் அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் , சிறப்பு வழிபாடு நடந்தது. சிவன், அம்மன் மற்றும் நந்திக்கு அபிேஷக ஆராதனைகள் இடம்பெற்றன. திருவீதியுலா, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.