Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பேரூரில் முப்பெரும் விழா: திரண்ட ... கருணா சாயிபாபா கோவிலில் அம்மனுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னை கோவில்களில் பக்தர்கள் அலை!
எழுத்தின் அளவு:
சென்னை கோவில்களில் பக்தர்கள் அலை!

பதிவு செய்த நாள்

03 ஆக
2016
12:08

சென்னை: குரு பெயர்ச்சி, ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை என மூன்று நிகழ்வுகளும் நேற்று ஒன்றாக வந்ததால் சென்னையில் கோவில்கள், குளக்கரை, கடற்கரையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. குரு பெயர்ச்சி நவக்கிரகங்களில் ஒருவரான குரு பகவான், ஆண்டுதோறும் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்வது,  குரு பெயர்ச்சி. குரு பகவான், நேற்று காலை சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு இடம் பெயர்ந்தார். இதை முன்னிட்டு, சென்னை நகரில் பிரசித்தி பெற்ற கோவில்கள், குருவுக்கு தனி சன்னிதி உள்ள கோவில்களில் பக்தர்கள் அலைகடலாகத் திரண்டனர். குரு பகவானுக்கு கொண்டைக்கடலை மாலை, மஞ்சள் வஸ்திரம் அணிவித்தும், நெய் தீபம் ஏற்றியும் பக்தர்கள் வழிபட்டனர். குறிப்பாக, சிம்மராசியிலிருந்து கன்னி ராசிக்கு குரு பகவான் இடம் பெயர்ந்ததால், மேஷம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, கும்பம் ஆகிய ஜென்ம ராசிகளுக்கு பல கோவில்களில் சங்கல்பம் செய்து வைக்கப்பட்டது.

ஆடி அமாவாசை: அமாவாசை திதி, இறந்த முன்னோர் வழி பாட்டுக்கு மிகவும் ஏற்றது. இறந்தவர்களின் திதி நாளில் திவசம் செய்தாலும், மாதந்தோறும் அமாவாசையன்று, தர்ப்பணம் செய்வதும் வழக்கத்தில் உள்ளது. இந்த நாட்களில் திதி கொடுக்க மறந்தோர், சூரியன், சந்திரனுக்குரிய கடக ராசியில் சஞ்சரிக்கும் மாதம் ஆடி மாதத்தில், இரண்டு கிரகங்கள் சேரும் ஆடி அமாவாசை நாளில் திதி கொடுப்பர். ஆடி அமாவாசையான நேற்று, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், கோவில் குளங்கள், கடலில் நீராடி தர்ப்பணம் செய்தனர். கோவில்களில் வழிபாடு செய்து, சிறப்பு பூஜைகள் செய்தனர். ஏழைகளுக்கு அன்னதானம், வஸ்திர தானமும் செய்தனர். மயிலை கபாலீசுவரர் கோவில், சைதாப்பேட்டை காரணீசுவரர், வேளச்சேரி தண்டீசுவரர் கோவில் உள்ளிட்ட கோவில் குளங்களில் திதி கொடுத்து, கோவில்களில் தரிசனம் செய்தனர்.

ஆடிப்பெருக்கு: ஆடிப் பெருக்கான நேற்று சென்னை வாசிகள் குளக்கரை, கடற்கரையில் பூஜித்து படையலிட்டு, நோன்புக்கயிறு கட்டிக்கொண்டனர். வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி கடலில் விட்டனர். மணமாகாத பெண்கள், கழுத்தில் மஞ்சள் நூல் கட்டிக் கொண்டனர். வீடுகளில் இருந்து கொண்டு வந்திருந்த கலவை சாதங்களை குடும்பத்துடன் உண்டு மகிழ்ந்தனர். - நமது நிருபர் -

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாத கடை ஞாயிறு விழா இன்று ... மேலும்
 
temple news
 – நமது நிருபர் –: ‘‘சத்தியம் என்பது எப்போதுமே ஒன்று தான். எந்நிலையிலும் அது மாறாமல் ... மேலும்
 
temple news
 வில்லிவாக்கம்: ஹிந்து ஆன்மிக சேவா ஸ்மிதி டிரஸ்ட் சார்பில், கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா சிறப்பாக நடைபெற்று ... மேலும்
 
temple news
ஊட்டி: ஊட்டி காந்தள் ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பைரவி திவ்ய பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar