Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

காளஹஸ்தி உண்டியல் காணிக்கை ரூ.78 ... பூதநாச்சியம்மன் கோவிலில் பொங்கல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அம்மாப்பேட்டையில் ஆடிப்பெருக்கு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஆக
2016
12:08

அரூர்: ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, டி.அம்மாப்பேட்டை சென்னியம்மன் கோவில் மற்றும் ஒகேனக்கல்லில் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த டி.அம்மாபேட்டையில், தென்பெண்ணையாற்றின் கரையோரம் சென்னியம்மன் கோவில் உள்ளது. 30,000 பக்தர்கள்: தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய, மூன்று மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு ஆடி மாதத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு நேற்று இந்த கோவிலுக்கு, பல்வேறு பகுதிகளில் இருந்து, 30,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்தனர்.

சிறப்பு பஸ்கள் இயக்கம்: பக்தர்கள் ஆற்றில் புனித நீராடி, பாறைகளுக்கு மஞ்சள், குங்குமம் இட்டு பூஜை செய்து வணங்கினர். பின்னர் ஆடு, கோழிகளை பலியிட்டு அங்கேயே சமைத்து, தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பரிமாறினர். ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு ஆற்றில் தண்ணீர் செல்வதால், பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். விழாவில், அரூர் ஆர்.டி.ஓ.,கவிதா, தாசில்தார் விஜயா உட்பட பலர் பங்கேற்றனர். விழாவை முன்னிட்டு, அரூர், ஊத்தங்கரையிலிருந்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

ஒகேனக்கல்லில் குவிந்தனர்: ஆடி பெருக்கையொட்டி, ஒகேனக்கல் காவிரி ஆற்றில், 20,000க்கும் மேற்பட்டோர் நேற்று குவிந்தனர். அதிகாலை, 4 மணி முதலே காவிரி ஆற்றில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். பின் கோவில்களில் வழிபாடு செய்தனர். புதுமண தம்பதிகள் தங்கள் தாலி கயிறை மாற்றிக் கொண்டு சிறப்பு பூஜை செய்தனர். ஆடிப்பெருக்கையொட்டி, பென்னாகரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான சிறப்பு பஸ்கள் ஒகேனக்கலுக்கு இயக்கப்பட்டன. கூட்ட நெரிசல் காரணமாக, 2 கி.மீ.,க்கு முன்பாகவே வாகனங்கள் நிறுத்தப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சேத்தியாத்தோப்பு: கூடலையாற்றுார் நர்த்தனவல்லபேஸ்வரர் கோவில் மாசி மகம் மகோற்சவம் கொடியேற்று விழா ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்: சீட்டணஞ்சேரி காளீஸ்வரர் கோவிலில், 20 ஆண்டுகளுக்கு பின், மஹா கும்பாபிஷேக விழா இன்று ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில், மாசி பிரம்மோத்சவ விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின் பிரம்மோத்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
செந்துறை: - நத்தம் செந்துறையில் ராமர்கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar