புதுார்: மதுரை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூரம் விழா நடந்தது. அதிகாலை 4:30 மணிக்கு கணபதி ஹோமம், புண்யாக வாகனம் முடிந்து அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. காலை 9:00 மணிக்கு சுமங்கலி பூஜை நடந்தது. மாலையில் திருவிளக்கு பூஜை நடந்தது. திரளான பெண்கள் பங்கேற்றனர்.