விழுப்புரம்: பூந்தோட்டம் ஆதிவாலீஸ்வரர் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜைகள் நடந்தது. விழுப்புரம் பழைய பஸ் நிலையம் பின்புறம் உள்ள பூந்தோட்டம் ஆதிவாலீஸ்வரர் கோவிலில், மூன்றாம் ஆடி வெள்ளியை முன்னிட்டு சங்காபிஷேகம் மற்றும் திருவிளக்கு பூஜைகள் நடந்தது. இதனையொட்டி, வேள்வி வழிபாடும், அம்மனுக்கு108 சங்காபிஷேகமும், 1008 திருவிளக்கு பூஜையும் நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கோவில் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.