Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வீராம்பட்டினம் தேரோட்டம் 19ம் தேதி ... புனிதத்தை இழந்த வாசுகி தீர்த்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஊழியர்கள் பற்றாக்குறையால் ராமேஸ்வரம் கோயில் பணிகள்... தொய்வு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஆக
2016
12:08

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் ஊழியர்கள் பற்றாக்குறையால் கோயில் பணிகள் தொய்வடைந்துள்ளது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 15 ஆண்டுக்கு முன்பு குருக்கள், முதுநிலை, இளநிலை ஊழியர்கள், ஓதுவார்கள், துப்புரவு பணியாளர்கள், காவலர்கள் என 250 பேர் பணியாற்றினர். இதனால் கோயில் நிர்வாக நடவடிக்கைகள், சுகாதார பணிகள், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் தொய்வின்றி நடந்தது. அனைத்து சன்னதிகளிலும் தினசரி பூஜைகள் முடங்காமல் நடந்தது. கடந்த 15 ஆண்டில் ஒய்வு பெற்ற குருக்கள், ஊழியர்களுக்கு பதில் புதிய ஊழியர்கள் நியமிக்காததால், தற்போது கோயிலில் 108 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். இதனால் அலுவலக முதுநிலை, இளநிலை ஊழியர்கள் பணிச்சுமையால் பரிதவித்து வருகின்றனர். இதனால் சேதுமாதவர், பைரவர் சன்னதிகளில் பூஜை செய்ய குருக்கள் இன்றி மூடிக்கிடக்கிறது. ஒரே குருக்கள் இரு சன்னதிகளில் பூஜை செய்கின்ற நிலையும் உள்ளது. மேலவாசல் முருகன், விநாயகர் கோயிலில் ஒப்பந்த அடிப்படையில் குருக்கள் நியமித்து பூஜைகள் நடக்கிறது.

நிர்வாக நடவடிக்கைகளும் தேக்கமடைந்துள்ளது. தற்போது கோயிலில் பாதுகாப்பு, துப்புரவுக்கு ஒப்பந்த அடிப்படையில் தனியார் ஊழியர்களை நியமித்து உள்ளனர். இவர்கள், கோயிலுக்குள் சுவாமி, அம்மன் உள்ளிட்ட முக்கிய சன்னதிகள் திறந்து மூடவும், துப்புரவு பணியில் பொறுப்புணர்வு இன்றி செயல்படும் போது அதற்கு நிரந்தர ஊழியர்களே பொறுப்பு ஏற்கவேண்டிய நிலை உள்ளது. எனவே ஆகம விதிகளின் படி கோயிலில் தங்கு தடையின்றி பூஜைகள் நடக்கவும், நிர்வாக நடவடிக்கைகள் தொய்வின்றி தொடரவும் காலியாக உள்ள ஊழியர் பணியிடங்களை நிரப்ப இந்து அறநிலைதுறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து அமைப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் குளத்தில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.திருத்தணி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவ விழா, இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; தியாகராஜ சுவாமி கோவிலில், மாசி பிரமோத்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar