பதிவு செய்த நாள்
16
ஆக
2016
09:08
நேர்வழியில் நடைபோட விரும்பும் தனுசு ராசி அன்பர்களே!
இந்த மாதம் கேது சாதக நிலையில் இருக்கிறார். மேலும் ஆக. 26வரை சுக்கிரனின் நற்பலன் இருக்கும். மற்ற கிரகங்கள் திருப்தியற்ற இடத்தில் இருப்பதால் உங்கள் செயல்பாடுகளில் நிதானமும் கவனமும் வேண்டும். தற்போது சிம்ம ராசியில் இருக்கும் புதன் வக்கிரத்தில் சிக்கி உள்ளார். ஒரு கிரகம் வக்கிரம் அடையும் போது அந்த கிரகத்தால் இயல்பாக செயல்பட முடியாது. உங்களை பொறுத்தவரை புதன் சாதகமாக காணப்படவில்லை. ஆனாலும் இந்த வக்கிர காலத்தில் அவரால் பெரியபாதிப்பு ஏதும் ஏற்படாது. கேதுவால் பக்தி உயர்வு மேம்படும். திட்டங்கள் அனைத்திலும் வெற்றி காணலாம். பொருளாதார வளம் அதிகம் இருக்கும். சூரியன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் உங்கள் செல்வாக்குக்கு பாதிப்பு ஏற்படலாம். சிலருக்கு வீண் கவலை இருக்கலாம். குடும்பத்தோடு புனித ஸ்தலங்களுக்கு சென்று வந்தால் குதுõகலம் அதிகரிக்கும் பெண்களால் செப் 10,11,12ல் பணம் கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். செப். 5,6,7ல் உறவினர்கள் வகையில் அனுகூலமாக இருக்கும். ஆனால் ஆக. 21,22ல் அவர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். ஆக. 27,28ல் சகோதரிகள் மூலம் உதவி கிடைக்கும்.
தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு கடந்த மாதம் அரசு வகையில் இருந்து வந்த அனுகூலமற்ற போக்கு மறையும். ஆக.26 வரை சுக்கிரன் சாதகமான நிலையில் இருப்பதால் சிறப்பான பலன்களை காணலாம். பொருளாதார வளம் இருக்கும். அனாவசிய செலவு இருக்காது. ஆனால் போட்டியாளர்களால் பிரச்னை வரும். சிலர் போட்டியாளர்களை சமாளிக்கலாம் என வேண்டாத ஆலோசனைகளைக் கூறி உங்களை திசை திருப்ப முயற்சிக்கலாம். இதனால் பிரச்னை கூடும். நீங்களே யோசித்து போட்டியை சமாளிப்பதே சிறந்தது. வெளியூர் பயணம் ஏற்படும். ஆக.25,26ல் எதிர்பாராத வகையில் லாபம் கிடைக்கும். ஆக.17,18, செப். 8,9,13,14ல் பணம் விரயம் ஆகலாம். அன்று கல்லாவை நீங்களே கவனித்துக் கொள்வது நல்லது.
பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும். இடமாற்ற பீதி ஏற்படும். உங்கள் செல்வாக்குக்கு பாதிப்பு ஏற்படலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். சிலருக்கு வீண் கவலை வரலாம். சிலர் சகவாச தோஷத்தால் பிரச்னைகளுக்கு ஆளாகலாம். எனவே யாரிடமும் எச்சரிக்கையுடன் பழகவும். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றம் காணலாம். செப். 3,4ல் சலுகைகளைக் கேட்டுப் பெற முயற்சிக்கலாம்.
கலைஞர்கள் சிறப்பான நிலையில் இருப்பர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசிடம் இருந்து விருது, பாராட்டு கிடைக்கும்.
மாணவர்கள் அதிக சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். சோம்பல் உங்களை பின்தங்கிய நிலைக்கு தள்ளலாம். சக மாணவர்களிடம் பார்த்து பழக வேண்டும் கவனம் தேவை. குரு பகவான் மன சஞ்சலத்தை ஏற்படுத்த இடம் உண்டு.
விவசாயிகளுக்கு விளைச்சல் சிறப்படையும். பணவரவு சிறப்பாக இருக்கும். புதிய சொத்து வாங்கலாம். கால்நடைச் செல்வம் பெருகும். வழக்கு விவகாரங்கள் இழுத்தடிக்க வாய்ப்புண்டு. புதிய வழக்குகள் வராத அளவுக்கு பக்கத்து நிலத்துக்காரர்களிடம் அனுசரித்து செல்வது எதிர்காலத்திற்கு நல்லது.
பெண்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். அக்கம் பக்கத்தினர் மிக உறுதுணையாக இருப்பர். ஆக.26 வரை வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். சுயதொழில் செய்து வரும் பெண்கள் அதிக வருமானம் பெறுவர். பெண் காவலர்களுக்கு உயர் பதவி கிடைக்கும். ஆக.26க்கு பிறகு, வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை. ஆக. 27,28ல் விருந்து விழா என சென்று வருவீர்கள். ஆக. 19,20, செப். 15,16ல் புத்தாடை, நகை வாங்கலாம். கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் நன்மதிப்பு பெறலாம். உடல்நிலையில் சிறு உபாதைகள் வரலாம். பயணத்தின் போது கவனம் தேவை.
நல்ல நாள்: ஆக. 19,20,25,26,27,28, செப்,3,4,5,6,7,10,11,12,15,16 ஆகிய நாட்களில் வெளியூர் பயணம் செல்லலாம். சுபநிகழ்ச்சிகளுக்கான பேச்சு வார்த்தைகளை நடத்தலாம். உங்கள் தொழில் திட்டங்களைத் துவங்கலாம்.
கவன நாள்: ஒரு ராசிக்கு எட்டாமிடத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலம்தான் சந்திராஷ்டமம். அந்த வகையில் உங்கள் ராசிக்கு 8-ம் இடமான கடக ராசியில் சந்திரன் ஆக. 29,30,31ல் இருப்பார். இந்த நாட்களில் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும். பண விஷயத்தில் கவனம் தேவை. அமைதியை கடைபிடிக்கவும்.
அதிர்ஷ்ட எண்: 5,6 நிறம்: வெள்ளை, சிவப்பு
பரிகாரம்: ஏழைகளுக்கு உதவி செய்தால் மன நிம்மதியும், வாழ்வில் வளமும் கிடைக்கும். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியையும், சனிக்கிழமை ராமரையும் வழிபட்டு வாருங்கள்.