பதிவு செய்த நாள்
22
ஆக
2016
12:08
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே, தொரவி பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் கோவிலில் சங்கடகர சதுர்த்தி பூஜை நடந்தது. விக்கிரவாண்டி ஒன்றியம், தொரவி கிராமத்தில் உள்ள பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் கோவிலில், சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு, நேற்று இரவு 7.௦௦ மணிக்கு விநாயகர், தட்சிணாமூர்த்தி, சிவகாமி உடனுறை நடராஜர், நந்தீஸ்வரர் சுவாமிகளுக்கு பால், தயிர், இளநீர் மற்றும் வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, விநாயகருக்கு அருகம்புல் மாலையுடன் சிறப்பு அலங்காரம் செய்து, இரவு 8.00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. பூஜைகளை, புதுச்சேரி சிவனடியார் சரவணன் செய்தார். முன்னதாக, சிவனடியார் மாலதி தலைமையில் திரு வாசகம் முற்றோதல் நடந்தது. அ.தி.மு.க., நிர்வாகி சுப்பிரமணி, பாலையா, ஞானபிரகாசம், ஏனாதிநாத நாயனார் அறக்கட்டளை நிர்வாகிகள், பூ ஜை ஏற்பாடுகளை செய்தனர்.