Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோட்டை பெருமாள் கோவில் ... திருவந்திபுரம் கோவிலில் பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரத்தில் திருவாசக 3நாள் மாநாடு: திருமுறை வீதியுலாவுடன் துவங்கியது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2011
11:09

சிதம்பரம்:சிதம்பரத்தில் மூன்று நாட்கள் திருவாசக மாநாடு மற்றும் சிவ தீட்சை வழங்கும் விழா திருமுறை வீதியுலாவுடன் நேற்று துவங்கியது.அரனருள் சார்பில் மூன்றாம் ஆண்டு திருவாசக மாநாடு மற்றும் சிவ தீட்சை வழங்கும் விழா 24ம் தேதி முதல் 26 வரை மூன்று நாட்கள் கீழ வீதி ராசி திருமண மண்டபத்தில் நடக்கிறது. தருமபுர ஆதினம் சண்முக தேசிய பரமாச்சாரிய சாமிகள், திருப்பனந்தாள் காசி மட இணை அதிபர் சுந்தரமூர்த்தி தம்பிரான் சாமிகள், திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதினம் சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சாமிகள், சிதம்பரம் மவுன மடாலய மவுன சுந்தரமூர்த்தி சாமிகள் ஆகிய நான்கு மடாதிபதிகள் பங்கேற்கின்றனர். மாநாடு துவக்க நாளான நேற்று அதிகாலை சிவபூஜகர்கள் ஆன்மார்த்த பூஜை நடத்தினர். அதனைத் தொடர்ந்து மவுன சுந்தரமூர்த்திகள் தலைமையில் திருமுறை பாராயணம் பாடியபடி பன்னிரு திருமுறை வீதியுலா நடந்தது. தொடர்ந்து மாநாடு துவங்கியது. அரனருள் தலைவர் சண்முகசுந்தரம் வரவேற்றார். குப்புசாமி தீட்சிதர் முன்னிலை வகித்தார். மாநாட்டை துவக்கி வைத்து மவுன சுந்தரமூர்த்தி சாமிகள் ஆசி வழங்கினார். திருமுறையின் செத்திலாபத்து தலைப்பில் புலவர் கணபதியும், அடைக்கலப்பத்து தலைப்பில் சிவமாதவனும் சொற்பொழிவாற்றினர்.ஏற்பாடுகளை அரனருள் நிறுவனர் தண்டபாணி, தலைவர் சண்முகசுந்தரம், மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் சந்திர பாலசுப்ரமணியன் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம் கடந்த டிசம்பர் மாதம் விமர்சியாக நடைபெற்றது. நீண்ட ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் தைப்பூசம் ஜன.26ல் பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்க ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருநாங்கூரில் 11 தங்க கருட சேவை உற்சவம்- 11 பெருமாளும் ஒரே இடத்தில் எழுந்தருள பக்தர்கள் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை; ஆலங்குடியில் இரண்டாவது குரு ஸ்தலமாக திகழும்  தர்மசம்வர்தினி அம்பாள் சமேத ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் அமாவாசை நாளில் போலி புரோகிதர்கள் உலா வருவதால், பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar