பதிவு செய்த நாள்
26
ஆக
2016
12:08
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை, சரநாராயண பெருமாள் கோவிலில், கோகுலாஷ்டமியை முன்னிட்டு, பெருமாள் சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு, இன்று (26ம் தேதி) அருள்பாலிக்கிறார். விழாவை முன்னிட்டு, நேற்று இரவு, உற்சவர் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, இன்று (26ம் தேதி) காலை 6:30 மணிக்கு, சுப்ரபாதம், 7:00 மணிக்கு, நித்யபடி பூஜை, மாலை 6:00 மணிக்கு, உறியடி உற்சவம் நடக்கிறது. உற்சவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இரவு, உற்சவர் பெருமாள், இந்திர விமானத்தில் வீதியுலா நடக்கிறது.